Skip to main content

Posts

Showing posts from August, 2022

காவல் தேவதை

# ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : காவல் தேவதை வெளியீடு : விதைகள் பதிப்பதிகம் 1. காவல் தேவதை : அர்ச்சனா : கணவரை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், தனிமையில் சிக்கி கொண்ட நாயகி இரண்டு மகள்கள் வீட்டிலும் மாறி மாறி சென்று அவர்களது அடாத பேச்சினாலும், வக்கிர புத்தியாலும் பாதிக்கப்பட்டு அவர்களை விட்டு தனியாக சென்று விடுகிறார். அவரது அடுத்த கட்டம் என்ன? தையல் தொழில் பார்த்து வரும் சங்கர், தன் மனைவி, மகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருவதையும், கொரானா எனும் கொடிய அரக்கனால் சிக்கி அவதியுறுவதையும், அதனால் அவரது மகள் அநாதை ஆவதையும் ரொம்ப அழுத்தமாகவும், மனதில் பதியும் விதமாகவும் சொல்லி இருக்காங்க. தனித்து விடப்பட்ட வயதான பெண்மணி மற்றும் சிறு பெண்ணின் கெதி என்ன? பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி வீட்டை விட்டு துரத்திய மகள்கள் இருவரும் தாயாரை மறுபடியும் ஏற்கிறார்களா? இக்கதையில் வரக்கூடிய காவல் தேவதை யார்? நாயகியா? சிறு பெண்ணா? அல்லது புதிய நபரா? பாமர மக்களை காக்க வேண்டிய சட்டமே அத்து மீறல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்குவது...

நேசிப்பாயா நெஞ்சமே...!

#ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : டெய்சி மாறன் முகநூல் லிங் படைப்பு : நேசிப்பாயா நெஞ்சமே...! வெளியீடு : தேவியின் கண்மணி (15: 06 : 2022) மனோ ரஞ்சன் : அப்பா பார்த்து வைக்கும் வசதியான வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்து திருமண நாளை எதிர்நோக்கி இருக்கும் நாயகன், அவளது ஒரு சில அடாவடியான பேச்சினால் அவதியுற்று, தகப்பனாரிடம் கூற முடியாமல் தவிக்கிறான். அவரோ மகனது முகபாவத்தையும், ஃபோனில் பேசிய வார்த்தைகளையும் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்று குழம்பி தவிக்கிறார்.  வசதியாக வாழ்ந்து தற்சமயம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சார்ந்தவரான ஓட்டுனரின் மகளின் அழகு, படிப்பில் மனம் தடுமாறுகிறார். திடீரென்ற விபத்தில் ஓட்டுனரின் மரணத்தைக் கண்டு கலங்கும் அவர், கை உடைந்த நிலையில் இருக்கும் மகனிடம் வாக்கு கேட்கிறார். அவரும் சிகிச்சை பலமின்றி இறந்து போகிறார். இந்நிலையில் அவனது திருமணம் நிற்கிறது. அவன் எடுக்கும் முடிவென்ன? தகப்பனாரின் ஆசையின் பேரில் கார் ஒட்டுனரின் மகளை மணந்து கொள்வானா அல்லது தாயாரின் விருப்பத்தின் பேரில் மணந்து கொள்கிறானா? ஓட்டுனரின் மகளை மருமகளாக ஏற்க பிடிக்காமல் தாயார் மேற்கொள...

ஜோதி விமர்சனம்

யாழினி (பாரதிப்பிரியன்) உறவுதான் ராகம்! (R.சுமதி) நேசிப்பாயா நெஞ்சமே...! (டெய்சி மாறன்) காவல் தேவதை ( பாரதிப்பிரியன்)

உறவுதான் ராகம்!

#ஜோதிரிவ்யூ முகநூல் லிங் எழுத்தாளர் : R. சுமதி மேம் படைப்பு : உறவுதான் ராகம்! தேவிகா : திருமணமாகி கணவனைப் பிரிந்திருக்கும் நாயகி, தன்னுடைய கல்லூரி நண்பரை பார்த்தவுடன் பேசுவது போல ஆரம்பம் ஆகிறது. பெற்றோரை இழந்து அக்காவின் வீட்டில் வசிப்பவளை பெண் பார்க்க வருகின்ற மாப்பிள்ளை வீட்டார் அனைவரும், அவளது அழகை விடவும் பணத்தின் மீதே நாட்டமுடன் காணப்படுகிறார்கள். அதை கொடுக்க முடியாமல் கவலைப்படுபவர்கள் வீட்டிற்கு நாயகன் பெண் பார்க்க வருகிறான். அவளை மிகவும் பிடித்திருப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறான். அடுத்ததாக வெளி வந்த அவனது பேச்சும், ஆசையும் அவளது வியப்பும் எங்கே கொண்டு போய் விடப் போகிறதென்று தெரியவில்லை. அதே நேரம் அப்படி என்ன நடந்து  விடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் நம்மை எகிற வைக்கிறது. பரணி ராசிக்காரியை மணந்தால் தரணி ஆளலாம், கோடீஸ்வரன் ஆகலாம் என்ற ஆசையில் அவளை மணந்து கொள்பவனின் எண்ணங்கள் ஈடேறுகிறதா? அதிர்ஷ்ட தேவதையாக நினைக்கும் மனைவி அவனது ஆசைகளை நிறைவேற்றுகிறாளா? எதனால் அந்த பிரிவு? என்பதை விறுவிறுப்பாகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள். ஆனாலும் நாயகன்...

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

Amazon Link

அமேசான் லிங் காத்திருந்தேன் கண்ணாளனே காவலனே நீ காதலன் ஆனாய் (ல்) விழியால் உயிரில் கலந்து மறவேனென்று நினைத்தாயோ...!!! காவ(த)ல் கொண்டேனடி கண்மணி மின்னலே நீ வந்த வேளையில் வினோதமானவனே என் தீராத தேடல் நீயடி!

வினோதமானவனே

                           " வினோதமானவனே"                சிறுகதை அன்று தோழியின் பிறந்த நாள் அதனால், அதிகாலையில்  எழுந்து குளியலை முடித்து தயாராகி, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்குச் சென்று, தோழியின் பெயரில்  அர்ச்சனை செய்து, சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி வந்து, சிறிது நேரம்  அமர்ந்து பின் தோழியை பார்க்கும் ஆவலில் விரைவாக கிளம்பினாள். வேகத்தை அதிகப்படுத்திய கீர்த்தனா கவனக்குறைவால் எதிரில் வந்த இரு சக்கரவாகனத்தின்  மீது நேராக சென்று மோதிக் கொண்டாள். நல்ல வேளை கீழே விழவில்லை, இருந்தும் கோபத்தை அடக்கி, ஏதோ அவன் தான் தவறு செய்து விட்டதாக நினைத்துக்கொண்டு  திட்டினாள் அவனை முந்திக் கொண்டு,  "ஏன்யா, கண்ணு தெரியலையா? பார்த்து வரத்தெரியாது, காலையிலே உயிரை எடுப்பதுக்குன்னே வந்திருக்கு பாரு" திட்டிக் கொண்டே வேகமாக  கிளம்பிச் சென்றாள். அவன் வாய் திறக்காமல் அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். கோவிலில் இருந்து விடுதிக்கு வந்து தோழியைக் காணச் சென்றால் அவள...