Skip to main content

உறவுதான் ராகம்!



#ஜோதிரிவ்யூ

முகநூல் லிங்

எழுத்தாளர் : R. சுமதி மேம்

படைப்பு : உறவுதான் ராகம்!


தேவிகா :

திருமணமாகி கணவனைப் பிரிந்திருக்கும் நாயகி, தன்னுடைய கல்லூரி நண்பரை பார்த்தவுடன் பேசுவது போல ஆரம்பம் ஆகிறது.

பெற்றோரை இழந்து அக்காவின் வீட்டில் வசிப்பவளை பெண் பார்க்க வருகின்ற மாப்பிள்ளை வீட்டார் அனைவரும், அவளது அழகை விடவும் பணத்தின் மீதே நாட்டமுடன் காணப்படுகிறார்கள். அதை கொடுக்க முடியாமல் கவலைப்படுபவர்கள் வீட்டிற்கு நாயகன் பெண் பார்க்க வருகிறான். அவளை மிகவும் பிடித்திருப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறான்.

அடுத்ததாக வெளி வந்த அவனது பேச்சும், ஆசையும் அவளது வியப்பும் எங்கே கொண்டு போய் விடப் போகிறதென்று தெரியவில்லை. அதே நேரம் அப்படி என்ன நடந்து  விடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் நம்மை எகிற வைக்கிறது.

பரணி ராசிக்காரியை மணந்தால் தரணி ஆளலாம், கோடீஸ்வரன் ஆகலாம் என்ற ஆசையில் அவளை மணந்து கொள்பவனின் எண்ணங்கள் ஈடேறுகிறதா? அதிர்ஷ்ட தேவதையாக நினைக்கும் மனைவி அவனது ஆசைகளை நிறைவேற்றுகிறாளா? எதனால் அந்த பிரிவு? என்பதை விறுவிறுப்பாகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.

ஆனாலும் நாயகன் இந்த அளவுக்கு பணத்தின் மீதும், வசதியான வாழ்வின் மீதும் பேராசை பிடித்து அலைய கூடாது. சரியான அடி கிடைத்தது. இன்னும் கொடுத்திருக்க வேண்டும். முடிவு நிறைவு

அவனது மேலாளர் கதாபாத்திரம் பயங்கரம். அடேங்கப்பா என்னா நடிப்புடா சாமி🤣🤣 ஹீீீரோவை ஜீரோ ஆக்கிட்டானே...

நாயகி சூப்பர்👌👌👌 பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு பொங்கும் இடம் அருமை.

(இதுவொரு புதினப் புதையல் குடும்ப நாவலில் 1 - 6 - 22 அன்று வெளியான நாவல். வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி படித்து விட்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.)

சிறு புத்தகத்தில் உள்ள எழுத்துக்களும் ரொம்ப சிறிய வடிவிலே காணப்பட்டன. ரொம்ப கவனிச்சு படிக்க வேண்டியதா போயிடுச்சு மேடம்🤣🤣🤣

எழுத்து நடை, கதையோட்டம், நகர்வு எல்லாமே வெகு சிறப்பு. தவறு செய்பவனும், பேராசை படுபவனும் ஒரு நாள் அகப்பட்டு தண்டனை அனுபவிக்காமல் போக மாட்டார்கள் என்பதை உணர்த்திய இடம் அருமை. அது போல் வஞ்சகனின் நெஞ்சில் உள்ள நஞ்சை கண்டறியாமல் பழகினால் முடிவில் ஆபத்தும் அவனுக்குத்தான்...

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் மேம்💐💐💐




Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ் பல சரக்கு கடை தொடர்கதை க்கான லிங் சரிதாயணம் 2 நூல் வெளியீட்டிற்கான லிங் கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்: டிரங் பொட்டி   நகைச்சுவை எழுத்துகளுக்கு அங்கீகாரம் இல்லையா  எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:  புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம். புஸ்தகா லிங் ************ நேர்காணல் : *************** பெயர் : பாலகணேஷ் ஊர் : மதுரை படிப்பு : பணி : எழுத வந்த வருடம் : இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை : நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : **** நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க: நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை. *** இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா: CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது! **** வரலாற்று நாவல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...