Skip to main content

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)


முகநூல் லிங்

#ஜோதிரிவ்யூ


எழுத்தாளர் : பாரதிப்பிரியன்

படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன்.

ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏

யாழினி :

பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள். 

சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, தன்னுடைய சுயநலத்திற்கு வித்திடுகிறான் சேர மன்னனின் படைத் தலைவன். பாண்டியன், சாளுக்கியன், களப்பிரார், சுந்தரவள்ளி, பார்த்திபன் என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசி ஏமாற்றும் இடத்தில் படு கில்லாடி என்றே எண்ண வைக்கிறான்.

மனைவியின் மீது உண்மையான அன்பை வைத்து, வாரிசில்லா வருத்தத்தையும் மறந்து பண்புடன் நடந்து கொள்ளும், பாண்டிய மன்னனின் மனதில் விசத்தை தேய்த்து அவரது உதவியை நாடுகிறான். 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கு ஏற்ப, அவனுக்கும் பெண்ணாசையுடன் மண்ணாசையும் பற்றிக் கொள்ள அவனுக்கு உதவுவதாக வாக்களிக்கிறான்.

மற்றொரு புறம் சாளுக்கிய தேசத்தை ஆண்ட புலிகேலி, பல்லவ படையை தோற்கடிக்க முயல்கிறான்.

கந்தமாறன் போர் வியூக திட்டத்தில் சேர நாடு களப்பிரார்கள் வசமானதால், அவர்களை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறான். 

இறந்து போய்விட்டதாக கூறப்படுகின்ற சேர மன்னனின் வாரிசு உயிரோடு வந்து, தன் நாட்டை சீரழித்தவர்களை எப்படி பழியெடுக்கிறாள்? அவளுக்கு உதவி புரிவது யார்? யாழினி மீதான ஆசையில் இருக்கும் பாண்டிய மன்னனின் கனவு நிறைவேறுகிறதா? களப்பிரார்கள் களையெடுக்கப்பட்டார்களா? ஒவ்வொருவரிடமும் நல்லவன் போல வேடம் பூண்டு ஏமாற்றும் விஜயன் திட்டம் நிறைவேறுகிறதா? என்பதை ரொம்ப ரொம்ப அட்டகாசமாக சொல்லியிருக்காங்க.

புத்தகத்தை திறந்தால் முடித்து விட்டு வேறு வேலை பார்க்கும் விதமாகவே இருக்கிறது. விறுவிறுப்பும், சுவராஸ்யமும் கலந்து ரெம்ப நன்றாக இருக்கு.

கந்தமாறனின் பார்வையும், வியூக திட்டங்களும், ஒற்றனை கண்டறிந்து பதிலடி கொடுக்கும் இடமும், பிடித்து வைக்கப்பட்டிருந்த களப்பிரார்களிடமிருந்து உண்மையை கண்டறியும் விதமும், புறா விடு தூதும் அருமை👌👌👌

பார்த்திபன் என்னைக் கொஞ்சம் குழப்பி விட்டுட்டான். அரச குமாரியின் மீது மிகுந்த பற்றுதலுடன் காணப்பட்டு, அவளது கோரிக்கையை சிரமேற்று செய்து கொடுக்க செல்கிறான். திடீரென்று பார்த்தால் எதிரியின் உறவினாக வருகிறான். அதிலும் நாயகி மீது கோபம், சேர தேசத்தின் மீதும் ஆசை. அடடடா!! இதென்ன இப்படி என பக்கென்று ஆகிவிட்டது. 

களப்பிரார்களின் தலைவன் கதாபாத்திரம் வெறி பிடித்த மிருகம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரிந்து கொள்ளாத அளவிற்கு, போதையும், பெண்களும் மயக்கி வைத்திருக்கிறது. பாவம்டா உன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள். பதறிற்று வாசிக்கையில் …

சிம்மவேணி கதாபாத்திரம் ஆளுமை நிறைந்தது. அடேங்கப்பா பயப்பட வச்சுட்டியேம்மா. பூவிழியின் காதலும் ஊடலும்👌👌👌👌 நந்தினி மோசம்.

யாழினியும், சிம்ம வேணியும் களப்பிரார்களுடன் உகுநீர்கல் கரையில் நடத்திய சண்டைக்காட்சி ரொம்ப நன்றாக இருந்தது. இறுதி அத்தியாயத்திலும் இரு பெண்களும் அத்தனை பலம் பெற்றவராக போரிட்ட இடம் மலைக்க செய்து விட்டன.

கமலக் கவியடிகள் பேச்சும், நடத்தையும் நன்றாக இருந்தது. ஆனால் நீவிரா இப்படி? என்று வியப்பாகவும் போயிற்று.

பாண்டிய மன்னா… உனக்கு இதெல்லாம் தேவைதானா?

சொல்ல சொல்ல நிறைய இருக்கு. ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். வாசிக்க விருப்பமிருப்பவர் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

மேலும் பல படைப்புகளை அட்டகாசமாக வழங்கவும், விருதுகள் பல பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐💐



Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...