Skip to main content

காவல் தேவதை


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : பாரதிப்பிரியன்

படைப்பு : காவல் தேவதை

வெளியீடு : விதைகள் பதிப்பதிகம்

1. காவல் தேவதை :

அர்ச்சனா :

கணவரை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், தனிமையில் சிக்கி கொண்ட நாயகி இரண்டு மகள்கள் வீட்டிலும் மாறி மாறி சென்று அவர்களது அடாத பேச்சினாலும், வக்கிர புத்தியாலும் பாதிக்கப்பட்டு அவர்களை விட்டு தனியாக சென்று விடுகிறார். அவரது அடுத்த கட்டம் என்ன?

தையல் தொழில் பார்த்து வரும் சங்கர், தன் மனைவி, மகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருவதையும், கொரானா எனும் கொடிய அரக்கனால் சிக்கி அவதியுறுவதையும், அதனால் அவரது மகள் அநாதை ஆவதையும் ரொம்ப அழுத்தமாகவும், மனதில் பதியும் விதமாகவும் சொல்லி இருக்காங்க.

தனித்து விடப்பட்ட வயதான பெண்மணி மற்றும் சிறு பெண்ணின் கெதி என்ன? பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி வீட்டை விட்டு துரத்திய மகள்கள் இருவரும் தாயாரை மறுபடியும் ஏற்கிறார்களா? இக்கதையில் வரக்கூடிய காவல் தேவதை யார்? நாயகியா? சிறு பெண்ணா? அல்லது புதிய நபரா? பாமர மக்களை காக்க வேண்டிய சட்டமே அத்து மீறல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்குவதும், வாழ்வாதாரத்தை அழிக்க முயல்வதும் சரிதானா? என்று பல கேள்விகளுடன் பதற்றமும், விறுவிறுப்பும் கலந்து செல்கிறது.

ஆரம்பம் முதல் இறுதிவரை கணிப்பை மீறிய நகர்வு. வாசிக்கையில் பல இடங்களில் பதறிற்று.

நாயகியின் மகள்கள் இருவரையும் பார்க்கும் போது அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. இரண்டு லட்ச ரூபாய் கொடுக்காததால் பேசிய வசவு வார்த்தையும், ஏ.டி.எம். கார்டை திருடி வைத்து மொத்த பணத்தையும் களவு செய்தது மட்டுமின்றி, அவளது மாமியாரின் பேராசையை காண்கையில் ச்சே... என்றாகி விட்டது.

பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயை விட, மாமியாரும் கணவரும் பெரிதாக போயிற்று. இருக்கட்டும்... அதுக்காக இப்படியா நடந்து கொள்வது? ஒரு வரைமுறை கிடையாதா? பணத்தின் மீதிருக்கும் மரியாதை. மனிதனின் மீது இல்லாமல் போனது மதிகெட்டவர்களின் அறிவீனம் அன்றி வேறென்ன சொல்வது?

சிறு பெண் கதாபாத்திரம் அருமை. அவளது பேச்சும், பாசமும், எதிரிகளிடம் மாறி மாறி மாட்டிக்கொண்டு பட்ட அல்லல்களும், ஸ்...ப்பா வாசிக்கையில் பதறிற்று.

கொரானா, காவலர்களின் அடாவடி, சமுதாயத்தை பற்றி குறிப்பிட்டிருந்த இடம் மாஸ். அதிலும் சமூக கருத்துக்கள், அத்தனை பேரையும் போட்டு தாக்கிய இடம்👌👌👌👏👏👏 நிறைய இடங்கள் சபாஷ் போட வைத்தன. 

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

2. மணம் மாறாத மலர்கள் :

இசைப்பிரியா :

ஆரம்பமே அதிரடியாகவும் டுவிஸ்ட் உடனும் பயணிக்கிறது. சிறார் பள்ளியில் பணிபுரியும் காவல் அதிகாரியை ஒரு பக்கம் மூன்று மாணவர்கள் கத்தியுடன் தொடர்ந்து வர, மறுபக்கம் மூன்று மாணவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். 'என்னடா நடக்கப் போகுது?' என்று பதற்றத்துடன் படித்தால் மூன்று மாணவர்களும் நாயகியை குத்த முயலும் போது, எதிரில் நின்ற மாணவர்கள் அதை வாங்கி கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் யார்? எதற்காக அவளை கொலை செய்ய முயன்றார்கள்? அனுப்பி வைத்தவர் யார்? போன்ற கேள்விக்கான பதில்கள் வரிசையாக வருகிறது.

தப்பு செய்து கொண்டு சிறார் பள்ளியில் அடைபட்டிருக்கும் மாணவர்கள் படுகின்ற கஷ்டம், மாணவர்களை பணம் காய்ச்சும் மரமாக பயன் படுத்திய விதம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, அடி, வன்கொடுமை எல்லாம் வாசிக்கையில் பாவமாக இருந்தது.

தவறு செய்தவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்த யுக்தி, அவர்கள் திருந்தி நல்வாழ்வு பெற நாயகி எடுக்கும் முயற்சி, அதை தடுத்து நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கை, தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்த பின்னரும், கடமை தவறாமல் நடந்து கொண்டது என்று அனைத்துமே ரொம்ப நன்றாக இருந்தது.

குழந்தை இல்லாமல் வருந்தும் போது அவளது கணவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சலாம் போட தோன்றியது. மனைவிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நிறைவேற்றிய விதம் அருமையாக இருந்தது.

மாணவன் அஸ்வினின் ஆரம்பம், தண்டனை, கடைசி அனைத்தும் பாவமாக இருந்தது. அவனது பேச்சும், கோபமும் நன்றாக இருந்தது.

வெற்றி கதாபாத்திரம் ஒரு காட்சிக்கு மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் வெகுசிறப்பு.

நாயகி கதாபத்திரம் தோரணை...

மேலும் பல அட்டகாசமான படைப்புகளை எழுதவும், விருதுகள் பல வாங்கவும் எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐💐

Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...