Skip to main content

நேசிப்பாயா நெஞ்சமே...!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : டெய்சி மாறன்


படைப்பு : நேசிப்பாயா நெஞ்சமே...!

வெளியீடு : தேவியின் கண்மணி (15: 06 : 2022)

மனோ ரஞ்சன் :

அப்பா பார்த்து வைக்கும் வசதியான வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்து திருமண நாளை எதிர்நோக்கி இருக்கும் நாயகன், அவளது ஒரு சில அடாவடியான பேச்சினால் அவதியுற்று, தகப்பனாரிடம் கூற முடியாமல் தவிக்கிறான். அவரோ மகனது முகபாவத்தையும், ஃபோனில் பேசிய வார்த்தைகளையும் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்று குழம்பி தவிக்கிறார். 

வசதியாக வாழ்ந்து தற்சமயம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சார்ந்தவரான ஓட்டுனரின் மகளின் அழகு, படிப்பில் மனம் தடுமாறுகிறார். திடீரென்ற விபத்தில் ஓட்டுனரின் மரணத்தைக் கண்டு கலங்கும் அவர், கை உடைந்த நிலையில் இருக்கும் மகனிடம் வாக்கு கேட்கிறார். அவரும் சிகிச்சை பலமின்றி இறந்து போகிறார். இந்நிலையில் அவனது திருமணம் நிற்கிறது.

அவன் எடுக்கும் முடிவென்ன? தகப்பனாரின் ஆசையின் பேரில் கார் ஒட்டுனரின் மகளை மணந்து கொள்வானா அல்லது தாயாரின் விருப்பத்தின் பேரில் மணந்து கொள்கிறானா? ஓட்டுனரின் மகளை மருமகளாக ஏற்க பிடிக்காமல் தாயார் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? திடீரென்று அவர்களுக்கு இடையில் வரும் புதிய நபர் யார்? என்று பல கேள்விகளுடன் ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாகவும், சுவராஸ்யமாகவும் நகர்கிறது.

நாயகன் பாத்திரம் சூப்பர்👌👌👌 அவனது இரண்டும் கெட்டான் போன்ற மனநிலை அருமை. பாவம் அவளிடம் கடுமையை காட்டும் இடமும், அதற்கான காரணமும், வாசிக்கையில் பாவமாகவும், சில நேரம் கடுப்பாகவும் இருந்தது🤣🤣

அவனது தாயார் பணத்தை கொண்டு சென்று விட்டு பேசிய இடமும், அதற்கான பதிலடியும் ரொம்ப நன்றாக இருந்தது. சரியான சிடுசிடுப்பு பேர் வழி.

ஒரே மகள் என்ற காரணத்தால் பெற்றோரை உடன் வைத்து பார்த்துக் கொள்ள நினைப்பதும், இல்லை நீ என்னுடன் வந்திரு என்று உத்தரவிடுவதும் தவறென்று தெரியாத முட்டாளை, மணந்து கொள்ளாமல் இருந்தது சிறப்பு.

இப்படிப்பட்ட பெண்களால் தானே இனிய தாம்பத்தியத்திலும், குடும்பத்திலும் விரிசல் உண்டாகி விடுகிறது ... படித்திருந்தும் முட்டாள் என்பதை இது போன்ற சிலர் அவ்வப்போது நிரூபித்து விடுகின்றனர்.

அபிராமி கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவளது பேச்சும், நடவடிக்கையும் அருமை👌👌

நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கின்றது. கதையோட்டம் சிறப்பு. 

புத்தகமாக கிடைக்கும் உங்கள் நாவல்களை, எனக்கு அனுப்பி விடுங்க. அவ்வப்போது நானும் வாசித்து மகிழ்கிறேன்.

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ் பல சரக்கு கடை தொடர்கதை க்கான லிங் சரிதாயணம் 2 நூல் வெளியீட்டிற்கான லிங் கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்: டிரங் பொட்டி   நகைச்சுவை எழுத்துகளுக்கு அங்கீகாரம் இல்லையா  எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:  புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம். புஸ்தகா லிங் ************ நேர்காணல் : *************** பெயர் : பாலகணேஷ் ஊர் : மதுரை படிப்பு : பணி : எழுத வந்த வருடம் : இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை : நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : **** நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க: நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை. *** இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா: CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது! **** வரலாற்று நாவல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...