Skip to main content

நேசிப்பாயா நெஞ்சமே...!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : டெய்சி மாறன்


படைப்பு : நேசிப்பாயா நெஞ்சமே...!

வெளியீடு : தேவியின் கண்மணி (15: 06 : 2022)

மனோ ரஞ்சன் :

அப்பா பார்த்து வைக்கும் வசதியான வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்து திருமண நாளை எதிர்நோக்கி இருக்கும் நாயகன், அவளது ஒரு சில அடாவடியான பேச்சினால் அவதியுற்று, தகப்பனாரிடம் கூற முடியாமல் தவிக்கிறான். அவரோ மகனது முகபாவத்தையும், ஃபோனில் பேசிய வார்த்தைகளையும் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்று குழம்பி தவிக்கிறார். 

வசதியாக வாழ்ந்து தற்சமயம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சார்ந்தவரான ஓட்டுனரின் மகளின் அழகு, படிப்பில் மனம் தடுமாறுகிறார். திடீரென்ற விபத்தில் ஓட்டுனரின் மரணத்தைக் கண்டு கலங்கும் அவர், கை உடைந்த நிலையில் இருக்கும் மகனிடம் வாக்கு கேட்கிறார். அவரும் சிகிச்சை பலமின்றி இறந்து போகிறார். இந்நிலையில் அவனது திருமணம் நிற்கிறது.

அவன் எடுக்கும் முடிவென்ன? தகப்பனாரின் ஆசையின் பேரில் கார் ஒட்டுனரின் மகளை மணந்து கொள்வானா அல்லது தாயாரின் விருப்பத்தின் பேரில் மணந்து கொள்கிறானா? ஓட்டுனரின் மகளை மருமகளாக ஏற்க பிடிக்காமல் தாயார் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? திடீரென்று அவர்களுக்கு இடையில் வரும் புதிய நபர் யார்? என்று பல கேள்விகளுடன் ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாகவும், சுவராஸ்யமாகவும் நகர்கிறது.

நாயகன் பாத்திரம் சூப்பர்👌👌👌 அவனது இரண்டும் கெட்டான் போன்ற மனநிலை அருமை. பாவம் அவளிடம் கடுமையை காட்டும் இடமும், அதற்கான காரணமும், வாசிக்கையில் பாவமாகவும், சில நேரம் கடுப்பாகவும் இருந்தது🤣🤣

அவனது தாயார் பணத்தை கொண்டு சென்று விட்டு பேசிய இடமும், அதற்கான பதிலடியும் ரொம்ப நன்றாக இருந்தது. சரியான சிடுசிடுப்பு பேர் வழி.

ஒரே மகள் என்ற காரணத்தால் பெற்றோரை உடன் வைத்து பார்த்துக் கொள்ள நினைப்பதும், இல்லை நீ என்னுடன் வந்திரு என்று உத்தரவிடுவதும் தவறென்று தெரியாத முட்டாளை, மணந்து கொள்ளாமல் இருந்தது சிறப்பு.

இப்படிப்பட்ட பெண்களால் தானே இனிய தாம்பத்தியத்திலும், குடும்பத்திலும் விரிசல் உண்டாகி விடுகிறது ... படித்திருந்தும் முட்டாள் என்பதை இது போன்ற சிலர் அவ்வப்போது நிரூபித்து விடுகின்றனர்.

அபிராமி கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவளது பேச்சும், நடவடிக்கையும் அருமை👌👌

நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கின்றது. கதையோட்டம் சிறப்பு. 

புத்தகமாக கிடைக்கும் உங்கள் நாவல்களை, எனக்கு அனுப்பி விடுங்க. அவ்வப்போது நானும் வாசித்து மகிழ்கிறேன்.

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐


Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...