Skip to main content

உன் பேரை சொல்லும் போதே


ஜோதி ரிவ்யூ

எழுத்தாளர் : லதா சரவணன்

படைப்பு : உன் பேரை சொல்லும் போதே

வெளியீடு : கண்மணி (ஜனவரி- 1- 2011)


இந்த நாவலை நான் வாங்கிய பின்னர் பத்துக்கு மேற்பட்ட முறை வாசித்து விட்டாலும், திரும்ப திரும்ப வாசிக்கும் ஆவலை அடக்கத்தான் முடியவில்லை. ஏனென்றால் அந்த வகையில் கதையோட்டம், கதாநாயக, நாயகியின் பாத்திரம் அமைந்து காணப்படுகிறது.

இதை எழுதிய எழுத்தாளர் யார் என்பது தற்சமயம் தான் புரிபட்டது. வாட்சப்பில் கேட்டு தெளிந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதான் உடனே கதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வந்து விட்டேன்.


சித்தார்த்தன்:

நடக்கவிருந்த திருமணம், திடீரென்று நின்று போவதால், பெண்களைக் கண்டாலே வெறுப்பவன் தன் கண் முன்னே வந்து நின்ற பெண்ணால் கோபப்படுவது, சிரிப்பது, வெறுப்பது, தன் வீட்டிற்கு வந்திருப்பவளிடம் முதலில் கடுமையை காட்டி பின் நட்புடன் பழகுவது, வார்த்தைகளால் வதைப்பது என பலவிதமான பரிணாமங்களை காட்டி நம்மை அப்படியே கதையோடு கட்டிப்போட்டு விடுகிறான்.

ஒரு கட்டத்தில் அவளை நேசிப்பவன், தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் பரிமாறாமல் இருக்கிறான். இந்நிலையில் யாரால் தன்னுடைய திருமணம் நின்று போனதாக எண்ணி மன வருத்தத்தில் மூழ்கி இருந்தானோ… அவளாலே மறுபடியும் பிரச்சனைக்கு உள்ளாக்கப் படுகிறான். அவனது காதலை நாயகியிடம் தெரிவிக்கிறானா? காதலர்களுக்கு இடையிலான ஊடல் சரி செய்யப்படுகிறதா? அவள் எதனால் அப்படி நடந்து கொள்கிறாள்? அண்ணனின் முகத்தில் மீண்டும் புன்னகையை மலரச் செய்ய தம்பி எடுக்கும் முடிவு என்ன? தம்பியை காதலியுடன் இணைத்து பேசும் நாயகன் உண்மை நிலையை அறிகிறானா? என பல விதமான கேள்விகளுடன் அட்டகாசமாக நாவலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.

ஆரம்பம் முதல் இறுதி வரையில் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. நாயகி கோவில் சிலையிடம் பேசும் காட்சியும், திருமண வீட்டில் நாயகனிடம் துடுக்காக பேசி விட்டு, சென்னையில் அவன் தான் தன்னுடைய அங்கிளின் மகன் என்று தெரியாமலேயே அவனிடம் வாயடித்து விட்டு மாட்டும் இடம்😅😅😅🤣🤣 

"உன்னைப் போய் நல்ல பெண் என்று போற்றி புகழ்கிறார் அப்பா" எனும் இடமும், அவளிடம் சீண்டி பேசி கஷ்டப்படுத்தியவன், அலுவலக ரீதியான விசயத்தில் அவளது கோபத்தில் கொதித்து, சாந்தமடையும் இடம்👌👌👌


லவ்பேர்ட்ஸ் காட்சியும், 🥰🥰🥰 இருவரின் பேச்சுக்கள், வழிசல், உரையாடல், காதல் அனைத்தும் ரொம்ப நன்றாக இருந்தது.

தம்பி கதாபாத்திரம் செம… வர்ணி என்று உச்சரித்து அவளுடன் அடிக்கும் கலாட்டா பேச்சுக்கள், அண்ணன் மீதான அக்கறை, அவர்களது சோகம் கண்டு வருந்தும் இடம் எல்லாமே அருமை.

சந்தியா அன்பாக பழகுபவரிடமே வில்லி வேலை காட்டப் பார்க்கிறாள். கூட இருந்தே குழி பறிப்பவள், தன்னுடைய தவறை உணராமல் முட்டாள் போல பேசும் இடங்கள் கடுப்பாக இருந்தது.

நாயக நாயகியரின் பெற்றோர் இயல்பாக வந்து கதையுடன் ஒன்றி போகிறார்கள்.

நாவல் வாசிக்க சுவராஸ்யமாக இருக்கிறது. எந்த இடத்திலும் விறுவிறுப்பும் ரசனையும் குறையவில்லை. எழுத்து நடையும், கதைக்கருவும் வெகு சிறப்பு. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் சிஸ்டர்💐💐💐

Comments

Post a Comment

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...