Skip to main content

உன் பேரை சொல்லும் போதே


ஜோதி ரிவ்யூ

எழுத்தாளர் : லதா சரவணன்

படைப்பு : உன் பேரை சொல்லும் போதே

வெளியீடு : கண்மணி (ஜனவரி- 1- 2011)


இந்த நாவலை நான் வாங்கிய பின்னர் பத்துக்கு மேற்பட்ட முறை வாசித்து விட்டாலும், திரும்ப திரும்ப வாசிக்கும் ஆவலை அடக்கத்தான் முடியவில்லை. ஏனென்றால் அந்த வகையில் கதையோட்டம், கதாநாயக, நாயகியின் பாத்திரம் அமைந்து காணப்படுகிறது.

இதை எழுதிய எழுத்தாளர் யார் என்பது தற்சமயம் தான் புரிபட்டது. வாட்சப்பில் கேட்டு தெளிந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதான் உடனே கதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வந்து விட்டேன்.


சித்தார்த்தன்:

நடக்கவிருந்த திருமணம், திடீரென்று நின்று போவதால், பெண்களைக் கண்டாலே வெறுப்பவன் தன் கண் முன்னே வந்து நின்ற பெண்ணால் கோபப்படுவது, சிரிப்பது, வெறுப்பது, தன் வீட்டிற்கு வந்திருப்பவளிடம் முதலில் கடுமையை காட்டி பின் நட்புடன் பழகுவது, வார்த்தைகளால் வதைப்பது என பலவிதமான பரிணாமங்களை காட்டி நம்மை அப்படியே கதையோடு கட்டிப்போட்டு விடுகிறான்.

ஒரு கட்டத்தில் அவளை நேசிப்பவன், தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் பரிமாறாமல் இருக்கிறான். இந்நிலையில் யாரால் தன்னுடைய திருமணம் நின்று போனதாக எண்ணி மன வருத்தத்தில் மூழ்கி இருந்தானோ… அவளாலே மறுபடியும் பிரச்சனைக்கு உள்ளாக்கப் படுகிறான். அவனது காதலை நாயகியிடம் தெரிவிக்கிறானா? காதலர்களுக்கு இடையிலான ஊடல் சரி செய்யப்படுகிறதா? அவள் எதனால் அப்படி நடந்து கொள்கிறாள்? அண்ணனின் முகத்தில் மீண்டும் புன்னகையை மலரச் செய்ய தம்பி எடுக்கும் முடிவு என்ன? தம்பியை காதலியுடன் இணைத்து பேசும் நாயகன் உண்மை நிலையை அறிகிறானா? என பல விதமான கேள்விகளுடன் அட்டகாசமாக நாவலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.

ஆரம்பம் முதல் இறுதி வரையில் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. நாயகி கோவில் சிலையிடம் பேசும் காட்சியும், திருமண வீட்டில் நாயகனிடம் துடுக்காக பேசி விட்டு, சென்னையில் அவன் தான் தன்னுடைய அங்கிளின் மகன் என்று தெரியாமலேயே அவனிடம் வாயடித்து விட்டு மாட்டும் இடம்😅😅😅🤣🤣 

"உன்னைப் போய் நல்ல பெண் என்று போற்றி புகழ்கிறார் அப்பா" எனும் இடமும், அவளிடம் சீண்டி பேசி கஷ்டப்படுத்தியவன், அலுவலக ரீதியான விசயத்தில் அவளது கோபத்தில் கொதித்து, சாந்தமடையும் இடம்👌👌👌


லவ்பேர்ட்ஸ் காட்சியும், 🥰🥰🥰 இருவரின் பேச்சுக்கள், வழிசல், உரையாடல், காதல் அனைத்தும் ரொம்ப நன்றாக இருந்தது.

தம்பி கதாபாத்திரம் செம… வர்ணி என்று உச்சரித்து அவளுடன் அடிக்கும் கலாட்டா பேச்சுக்கள், அண்ணன் மீதான அக்கறை, அவர்களது சோகம் கண்டு வருந்தும் இடம் எல்லாமே அருமை.

சந்தியா அன்பாக பழகுபவரிடமே வில்லி வேலை காட்டப் பார்க்கிறாள். கூட இருந்தே குழி பறிப்பவள், தன்னுடைய தவறை உணராமல் முட்டாள் போல பேசும் இடங்கள் கடுப்பாக இருந்தது.

நாயக நாயகியரின் பெற்றோர் இயல்பாக வந்து கதையுடன் ஒன்றி போகிறார்கள்.

நாவல் வாசிக்க சுவராஸ்யமாக இருக்கிறது. எந்த இடத்திலும் விறுவிறுப்பும் ரசனையும் குறையவில்லை. எழுத்து நடையும், கதைக்கருவும் வெகு சிறப்பு. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் சிஸ்டர்💐💐💐

Comments

Post a Comment

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...