Skip to main content

உன் பேரை சொல்லும் போதே


ஜோதி ரிவ்யூ

எழுத்தாளர் : லதா சரவணன்

படைப்பு : உன் பேரை சொல்லும் போதே

வெளியீடு : கண்மணி (ஜனவரி- 1- 2011)


இந்த நாவலை நான் வாங்கிய பின்னர் பத்துக்கு மேற்பட்ட முறை வாசித்து விட்டாலும், திரும்ப திரும்ப வாசிக்கும் ஆவலை அடக்கத்தான் முடியவில்லை. ஏனென்றால் அந்த வகையில் கதையோட்டம், கதாநாயக, நாயகியின் பாத்திரம் அமைந்து காணப்படுகிறது.

இதை எழுதிய எழுத்தாளர் யார் என்பது தற்சமயம் தான் புரிபட்டது. வாட்சப்பில் கேட்டு தெளிந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதான் உடனே கதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வந்து விட்டேன்.


சித்தார்த்தன்:

நடக்கவிருந்த திருமணம், திடீரென்று நின்று போவதால், பெண்களைக் கண்டாலே வெறுப்பவன் தன் கண் முன்னே வந்து நின்ற பெண்ணால் கோபப்படுவது, சிரிப்பது, வெறுப்பது, தன் வீட்டிற்கு வந்திருப்பவளிடம் முதலில் கடுமையை காட்டி பின் நட்புடன் பழகுவது, வார்த்தைகளால் வதைப்பது என பலவிதமான பரிணாமங்களை காட்டி நம்மை அப்படியே கதையோடு கட்டிப்போட்டு விடுகிறான்.

ஒரு கட்டத்தில் அவளை நேசிப்பவன், தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் பரிமாறாமல் இருக்கிறான். இந்நிலையில் யாரால் தன்னுடைய திருமணம் நின்று போனதாக எண்ணி மன வருத்தத்தில் மூழ்கி இருந்தானோ… அவளாலே மறுபடியும் பிரச்சனைக்கு உள்ளாக்கப் படுகிறான். அவனது காதலை நாயகியிடம் தெரிவிக்கிறானா? காதலர்களுக்கு இடையிலான ஊடல் சரி செய்யப்படுகிறதா? அவள் எதனால் அப்படி நடந்து கொள்கிறாள்? அண்ணனின் முகத்தில் மீண்டும் புன்னகையை மலரச் செய்ய தம்பி எடுக்கும் முடிவு என்ன? தம்பியை காதலியுடன் இணைத்து பேசும் நாயகன் உண்மை நிலையை அறிகிறானா? என பல விதமான கேள்விகளுடன் அட்டகாசமாக நாவலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.

ஆரம்பம் முதல் இறுதி வரையில் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. நாயகி கோவில் சிலையிடம் பேசும் காட்சியும், திருமண வீட்டில் நாயகனிடம் துடுக்காக பேசி விட்டு, சென்னையில் அவன் தான் தன்னுடைய அங்கிளின் மகன் என்று தெரியாமலேயே அவனிடம் வாயடித்து விட்டு மாட்டும் இடம்😅😅😅🤣🤣 

"உன்னைப் போய் நல்ல பெண் என்று போற்றி புகழ்கிறார் அப்பா" எனும் இடமும், அவளிடம் சீண்டி பேசி கஷ்டப்படுத்தியவன், அலுவலக ரீதியான விசயத்தில் அவளது கோபத்தில் கொதித்து, சாந்தமடையும் இடம்👌👌👌


லவ்பேர்ட்ஸ் காட்சியும், 🥰🥰🥰 இருவரின் பேச்சுக்கள், வழிசல், உரையாடல், காதல் அனைத்தும் ரொம்ப நன்றாக இருந்தது.

தம்பி கதாபாத்திரம் செம… வர்ணி என்று உச்சரித்து அவளுடன் அடிக்கும் கலாட்டா பேச்சுக்கள், அண்ணன் மீதான அக்கறை, அவர்களது சோகம் கண்டு வருந்தும் இடம் எல்லாமே அருமை.

சந்தியா அன்பாக பழகுபவரிடமே வில்லி வேலை காட்டப் பார்க்கிறாள். கூட இருந்தே குழி பறிப்பவள், தன்னுடைய தவறை உணராமல் முட்டாள் போல பேசும் இடங்கள் கடுப்பாக இருந்தது.

நாயக நாயகியரின் பெற்றோர் இயல்பாக வந்து கதையுடன் ஒன்றி போகிறார்கள்.

நாவல் வாசிக்க சுவராஸ்யமாக இருக்கிறது. எந்த இடத்திலும் விறுவிறுப்பும் ரசனையும் குறையவில்லை. எழுத்து நடையும், கதைக்கருவும் வெகு சிறப்பு. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் சிஸ்டர்💐💐💐

Comments

Post a Comment

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ் பல சரக்கு கடை தொடர்கதை க்கான லிங் சரிதாயணம் 2 நூல் வெளியீட்டிற்கான லிங் கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்: டிரங் பொட்டி   நகைச்சுவை எழுத்துகளுக்கு அங்கீகாரம் இல்லையா  எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:  புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம். புஸ்தகா லிங் ************ நேர்காணல் : *************** பெயர் : பாலகணேஷ் ஊர் : மதுரை படிப்பு : பணி : எழுத வந்த வருடம் : இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை : நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : **** நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க: நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை. *** இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா: CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது! **** வரலாற்று நாவல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...