Skip to main content

Posts

Showing posts from October, 2022

குளச்சல் போர்

குளச்சல் போர் திருவிதாங்கூர்-டச்சு போர் பகுதி மார்த்தாண்ட வர்மாவிடம் சரணடையும் டச்சுப்படை வீரர்கள் போருக்கான காரணம் மார்த்தாண்ட வர்மா தனது நாட்டை விரிவாக்கம் செய்வதற்காகப் பல குறுநில அரசுகளை வென்றெடுக்க விரும்பினார். டச்சு நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த  தேசிங்க நாடு   நெடுமங்காடு  அரசுகள் மீது மார்த்தாண்ட வர்மா போர் தொடுத்ததால் டச்சுக்காரர்களின் வணிகம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானது. எனவே 1739 முதல் தேசிங்கநாடு பகுதியில் டச்சுப் படையினர் திருவாங்கூர் படையுடன் மோதி வந்தனர். 1740 ஆகஸ்டு மாதத்தில் மார்த்தாண்ட வர்மா  குளச்சல்  பகுதியில் வணிகம் செய்வதற்குப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தார். தென் பகுதியில் தனக்குப் போட்டியாக பிரெஞ்சுக்காரர்கள் வருவதை விரும்பாத டச்சுக்காரர்கள் உடனடியாக குளச்சல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். முதல் தாக்குதல் 1740 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று குளச்சல் கடல் பகுதியை முற்றுகையிட்ட டச்சுக் கப்பல்களிலிருந்து கடற்கரையை நோக்கிக் கடுமையான பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரண்டு நாள்களுக்...

இரணியல் அரண்மனை

இரணியல் அரண்மனை இரணியல் அரண்மனை  (Eraniel Palace) என்பது  தமிழ்நாட்டின் ,  கன்னியாகுமரி மாவட்டத்தின் ,  தக்கலையில்  இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இருந்தது, ஏனென்றால் இரணியல் நகரம் பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு தலைநகரானது  பத்மநாபபுரத்துக்கு  மாற்றப்பட்டது. முகப்பு வாயிலில் இருந்து இரணியல் அரண்மனையின் தோற்றம் கட்டடக்கலை இந்த அரண்மனையானது ஆறு ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இது பண்டையச் சேரர் கட்டிடக் கலையின் எச்சமாகும். இருப்பினும், பல தசாப்தங்களாக புறக்கணிப்பட்டதன் காரணமாக இது பெரும்பாலும் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, அரண்மனையின் மூன்று பகுதிகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய பகுதிகளாக உள்ளன: படிப்புரம் என்னும் முதன்மை அரண்மனைக்கு செல்லும் பெர...

சங்கத் தமிழ்ப் பாண்டியன் (தமிழ் உறவுகளின் காவலன்)

ஜோதி விமர்சனம் எழுத்தாளர் : பாரதிப்பிரியன் நூலின் பெயர் : சங்கத் தமிழ்ப் பாண்டியன் வெளியீடு : விதைகள் பதிப்பகம் முகநூல் லிங் :  முகநூல் லிங் முதலில் இப்படி ஒரு கதைக்களத்தை எழுத வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக எண்ணற்ற தகவல்களை திரட்டிய எழுத்தாளர் பாரதிப்பிரியனுக்கு என்னுடைய மனம் நிறை பாராட்டுகள். தென்குமரி தேசம் கடற்கோளால் அழிந்து போனதை ரொம்ப ரொம்ப அழகாக வடிவமைத்து காட்டி உள்ளார். எனது தேசம் எனும் எண்ணத்தில் முந்தைய நாட்களில் நடந்த நிகழ்வை தெரிந்து கொள்ள எண்ணி வாசிப்பை தொடங்கினேன். அதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்களையும் தெரிந்து கொண்டேன். மிடாலம், குறும்பனை, கருங்கல், முக்கூடல், காவல் கிணறு, மகேந்திரகிரி என்று என்னுடைய ஊரை சுற்றியுள்ள பகுதியில் நடந்த சம்பவங்களை அறிந்து வியப்பிற்கு உள்ளானேன். ஒரு கிராமமே சுனாமியால் அழிந்து போயிருக்கிறது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோமோ தவிர, கடல் மற்றும் வானத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்பு, அப்போது உள்ளவர்கள் தெரிந்து கொண்டால் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க முனைவார்கள், அன்றைய மன்னராட்சி எப்படி எல்லாம் நடந்து...

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ் பல சரக்கு கடை தொடர்கதை க்கான லிங் சரிதாயணம் 2 நூல் வெளியீட்டிற்கான லிங் கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்: டிரங் பொட்டி   நகைச்சுவை எழுத்துகளுக்கு அங்கீகாரம் இல்லையா  எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:  புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம். புஸ்தகா லிங் ************ நேர்காணல் : *************** பெயர் : பாலகணேஷ் ஊர் : மதுரை படிப்பு : பணி : எழுத வந்த வருடம் : இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை : நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : **** நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க: நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை. *** இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா: CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது! **** வரலாற்று நாவல்...

உன் பேரை சொல்லும் போதே

ஜோதி ரிவ்யூ எழுத்தாளர் : லதா சரவணன் படைப்பு : உன் பேரை சொல்லும் போதே வெளியீடு : கண்மணி (ஜனவரி- 1- 2011) இந்த நாவலை நான் வாங்கிய பின்னர் பத்துக்கு மேற்பட்ட முறை வாசித்து விட்டாலும், திரும்ப திரும்ப வாசிக்கும் ஆவலை அடக்கத்தான் முடியவில்லை. ஏனென்றால் அந்த வகையில் கதையோட்டம், கதாநாயக, நாயகியின் பாத்திரம் அமைந்து காணப்படுகிறது. இதை எழுதிய எழுத்தாளர் யார் என்பது தற்சமயம் தான் புரிபட்டது. வாட்சப்பில் கேட்டு தெளிந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதான் உடனே கதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வந்து விட்டேன். சித்தார்த்தன்: நடக்கவிருந்த திருமணம், திடீரென்று நின்று போவதால், பெண்களைக் கண்டாலே வெறுப்பவன் தன் கண் முன்னே வந்து நின்ற பெண்ணால் கோபப்படுவது, சிரிப்பது, வெறுப்பது, தன் வீட்டிற்கு வந்திருப்பவளிடம் முதலில் கடுமையை காட்டி பின் நட்புடன் பழகுவது, வார்த்தைகளால் வதைப்பது என பலவிதமான பரிணாமங்களை காட்டி நம்மை அப்படியே கதையோடு கட்டிப்போட்டு விடுகிறான். ஒரு கட்டத்தில் அவளை நேசிப்பவன், தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் பரிமாறாமல் இருக்கிறான். இந்நிலையில் யாரால் தன்னுடைய திருமண...