Skip to main content

சங்கத் தமிழ்ப் பாண்டியன் (தமிழ் உறவுகளின் காவலன்)


ஜோதி விமர்சனம்

எழுத்தாளர் : பாரதிப்பிரியன்

நூலின் பெயர் : சங்கத் தமிழ்ப் பாண்டியன்

வெளியீடு : விதைகள் பதிப்பகம்

முகநூல் லிங் : முகநூல் லிங்


முதலில் இப்படி ஒரு கதைக்களத்தை எழுத வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக எண்ணற்ற தகவல்களை திரட்டிய எழுத்தாளர் பாரதிப்பிரியனுக்கு என்னுடைய மனம் நிறை பாராட்டுகள். தென்குமரி தேசம் கடற்கோளால் அழிந்து போனதை ரொம்ப ரொம்ப அழகாக வடிவமைத்து காட்டி உள்ளார். எனது தேசம் எனும் எண்ணத்தில் முந்தைய நாட்களில் நடந்த நிகழ்வை தெரிந்து கொள்ள எண்ணி வாசிப்பை தொடங்கினேன். அதன் மூலம் பல திடுக்கிடும் தகவல்களையும் தெரிந்து கொண்டேன். மிடாலம், குறும்பனை, கருங்கல், முக்கூடல், காவல் கிணறு, மகேந்திரகிரி என்று என்னுடைய ஊரை சுற்றியுள்ள பகுதியில் நடந்த சம்பவங்களை அறிந்து வியப்பிற்கு உள்ளானேன்.

ஒரு கிராமமே சுனாமியால் அழிந்து போயிருக்கிறது என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோமோ தவிர, கடல் மற்றும் வானத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதனால் ஏற்படும் பாதிப்பு, அப்போது உள்ளவர்கள் தெரிந்து கொண்டால் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க முனைவார்கள், அன்றைய மன்னராட்சி எப்படி எல்லாம் நடந்துள்ளது, மன்னன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லாம் ஒவ்வொன்றையும் தத்ரூபமாக எடுத்துக்காட்டி உள்ளர் நம் எழுத்தாளர்.

ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன வரப்போகிறது எனும் ஆவல், புத்தகத்தை கீழே வைக்க விட மறுக்கிறது. வர்ணனை காட்சிகளும், கதையோட்டமும், கதை நகர்வுகளும், அப்படியே நம்மை கதையினூடு கட்டிப் போடுகிறது. இனி மீத விசயங்கள் விமர்சனத்தில் ..


 முடத்திருமாறன்:

ஆரம்பமே கொந்தளிக்கும் அலைகடலில் பயணிக்கும் நாயகனும், அவரது மனைவியும் கொற்கையில் உள்ள அவனது தாய்மாமன் வீட்டிற்கு போவது போலவும், அங்கு சென்று அவர்களிடம் தென்குமரி தேசமே கடற்கோளால் பாதிக்கப்பட்டு சமுத்திரத்தில் மூழ்கி விட்டது. நாட்டு மக்கள் பேரரசர் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று, கண்ணீர் கடலில் தத்தளிப்பது போலவும் ஆரம்பமாகிறது.

அதிர்ச்சியுடன் நடந்த விபரங்களை கேட்க, அவனும் முந்தைய நிகழ்வுகளை அப்படியே எடுத்துரைப்பதுடன், நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளையும், சதிகள், பிரச்சனைகள், போர் என்று பல விறுவிறுப்பான சம்பவங்களை எழுத்தாளர் தன்னுடைய பாணியில் திறம்பட கையாண்டிருக்கிறார்.

தென்குமரி தேசத்தின் பேரரசு பவித்திர பாண்டியனின் வாரிசு. தகப்பனின் கோபத்தில் ஆளாகி நாட்டை விட்டு ஆறுவருடங்கள் வெளியே செல்லுமாறு தண்டிக்கப்படுபவன். அவன் கற்ற  சங்கத்தமிழை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறான். எதனால் மகனுக்கு இப்படி ஒரு தண்டனையை அரசர் கொடுக்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு காரணம். மகனுக்கு தெரியாமல் பெற்றோர் எடுத்த முடிவும், அவனுக்காக பார்த்து வைத்த பெண்ணும் ... அவளது திமிர், அடாவடி பிடிக்காமல் திருமணம் செய்ய மறுக்க, அவளோ அகந்தை, திமிர், அடாவடியில் அவனையும், அவனது நாட்டையும் அழிக்க சதித்திட்டம் தீட்டுகிறாள். அவள் மட்டுமல்ல சதிராணி எனும் பெயரில் வரும் வேறு ஒரு பெண்ணும் பேரரசுக்கு எதிராக செயல்பட்டு அவரது பெயர், நாட்டிற்கு களங்கத்தை விளைவிக்க முயல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேறிய இளவரசன், எங்கனம் அவர்களிடம் இருந்து நாட்டையும், பேரரசையும் காப்பாற்றுகிறான்? தண்டனை பெற்றவர்கள் திருந்துகிறார்களா? அல்லது மறுபடியும் சதியை முன்னெடுக்கிறார்களா என்பதே கதை...

***
நாட்டை விட்டு வெளியேறிய இளவரசன் ஒவ்வொரு இடங்களுக்கும் பயணித்து அங்கு செய்கின்ற நற்காரியங்கள்👌👌👌 ரொம்ப நன்றாக இருந்தது. குறிப்பாக சாம்பிராணி காட்டு பிரச்சனை, யாளியை அடக்கி சிம்ம கொம்பனாக மாற்றும் இடம், முத்தூர் வணிகர்களின் திட்டத்தை முறியடிப்பது, சீனன் லியூ ஜி காட்சிகள், தங்கமலையில் வருடக்கணக்காக பணிபுரியும் அடிமைகள் பேச்சுக்கு அவனது பதில்கள், போர் வியூகங்கள் அனைத்தும் வெகுசிறப்பு...

கருங்கல் போராட்டம், தங்கசுரங்கத்தில் நடக்கும் சண்டை, கைதிகளை உயிரோடு எரிப்பது, அரசன் என்று பாராமல் கைது செய்வது, தூங்கு தண்டனை கொடுக்க முடிவெடுப்பது,  மூன்று சிற்றரசை கட்டி வைத்து கொளுத்த முயலும் இடம், பேரரசர் மீதே பெண்ணை வைத்து தவறாக நடந்ததாக பழி போடுவது, ... இன்னும் பல இடங்களில் வருகின்ற நிகழ்வுகள் எல்லாமே எதிரிகளின்  வெறித்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. 

சதிராணி யார் என்று அறிந்து கொள்ள இளவரசன் மேற்கொள்ளும் முயற்சிகளும், அவளிடமிருந்து விழுகின்ற சூடான கேள்விக்கு அரசரின் தலை கவிழ்ந்த தோற்றமும், சிற்றன்னையின் எதிர்வாதமும்👌👌👌

சிற்றன்னையின் தவறான வடிகாட்டுதலால் சிதறி, தலைக்கனம் பிடித்து வாழும் கண்ணுக்கினியாள், மனித பிறவியே அல்ல! இளவரசனை அடைய வேண்டி அவள் எடுக்கும் முயற்சியும்,  காதல் வேடமிட்டு அரசனையே சாய்ப்பதும், அனைவரையும் கொன்று குவித்தேனும் அவர்களின் ரத்தத்தின் மீது நடந்து அரசியாக முயல்வதும், இளவரசியை வார்த்தையால் வதைத்து அனைவருக்கும் தண்டனை கொடுக்கும் இடமும் கொடுமையின் உச்சம்!!

இளவரசின் இணை அருமையான தேர்வு. அவர்களின் ஊடலும் கூடலும் ரசனையாக இருக்கிறது. உமையாள், சிம்ம கொம்பன்👌👌👌

அருண்மொழி வர்மனை பற்றி கட்டாயம் சொல்லியாக வேண்டும். வானில் நடக்கும் மாறுதல்களையும், ஆமையின் மீதேறி கடலுக்குள் சென்று நடக்கப் போவதை கண்டறிய முயல்வதும்,  தான் உண்மையை உரைத்தும் ஏற்க மறுத்தவர் முன் ஆவேசமாக பேசிய இடமும் அட்டகாசமாக இருந்தது.

கடற்கோளால் நகரமும், நாட்டு மக்களும் அழிந்து போவதை படித்து அழுது விட்டேன். இறுதி காட்சி செம விறுவிறுப்பு. பிரமாதமாக இருந்தது.

ஒவ்வொரு காட்சியும் ரொம்ப ரொம்ப நன்றாகவும், அருமையாகவும் இருக்கிறது. கதையும் பெரியது... அதனால் விமர்சனமும் பெரியதாகி விட்டது. கட்டாயம் எல்லோரும் வாசிக்கும் விதமாக தரமான முறையில் அச்சிடப்பட்டு உள்ளது. 

தேசிய விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் ஒருங்கே பெற்றுள்ளது. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ் பல சரக்கு கடை தொடர்கதை க்கான லிங் சரிதாயணம் 2 நூல் வெளியீட்டிற்கான லிங் கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்: டிரங் பொட்டி   நகைச்சுவை எழுத்துகளுக்கு அங்கீகாரம் இல்லையா  எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:  புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம். புஸ்தகா லிங் ************ நேர்காணல் : *************** பெயர் : பாலகணேஷ் ஊர் : மதுரை படிப்பு : பணி : எழுத வந்த வருடம் : இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை : நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : **** நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க: நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை. *** இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா: CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது! **** வரலாற்று நாவல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...