Skip to main content

மதுபானம் தயாரித்தல்


மது தயாரித்தல்

மது தயாரித்தல் (ஒயின்) என்பது   திராட்சை அல்லது பிற மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறை நொதிக்கச்செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டு ஒயின் போத்தல்களில் அடைக்கப்படுகிறது. பெரும்பாலான மதுவகைகள் திராட்சைகளைக் கொண்டு செய்யப்பட்டாலும், மற்ற பழங்கள் அல்லது தாவரங்களிலிருந்து இது தயாரிக்கப்படலாம். மீட் மதுவானது தேன் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு மது ஆகும்.

மது திராட்சை
திராட்சையின் உடற்கூறியல், நாம் காண்பது அதனுள் இருக்கும் உள்பகுதிகள் ஆகும்.
நொறுக்கியில் இருந்து வெளியேற்றப்படும் நொறுக்கப்பட்ட திராட்சைகள்

மதுபானத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்: அசைவில்லாத மது உற்பத்தி முறை (கார்பனேற்றம் இல்லாமல்) மற்றும் ஒளிர் ஒயின் உற்பத்தி முறை (கார்பனேற்றம் - இயற்கை அல்லது உட்செலுத்தப்படுதல்).

மது மற்றும் மதுபானம் பற்றிய அறிவியல் ஒனாலஜி என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக மதுவைத் தயாரிப்பவர் வைன்மேக்கர் அல்லது வின்ட்னெர் என்று அழைக்கப்படுகிறார்.

செயல்முறைகள்:

திராட்சை சாறெடுக்க முதலில் திராட்சையை அரைத்து கூழாக்க வேண்டும், பின்பு ௦.250 மி.கி பொட்டாசியம் மெட்டா பைசல்பேட், ஒரு லிட்டர் தண்ணிரில் சேர்த்து அதனுடன் 1:10 என்ற அளவில் ஈஸ்டும் சேர்க்கப்பட்டு குறைந்த வெப்பத்தில் பத்து நாட்களுக்கு குறையாமல் வைக்கப்பட வேண்டும். பல இரசாயன மாற்றங்களுக்குப் பிறகு மதுவின் மணம் வீசும். சரியான கூட்டுப் பொருள்கள் சேர்க்கவில்லை என்றாலும், வைக்கவில்லை என்றாலும் அசிட்டிக் அமில பாக்டிரியா உள்ளே நுழைந்து இந்த சாற்றை வினிகராகவும் , நீராகவும் மாற்றிவிடும்.

மதுஉற்பத்தி நாடுகள்:

உலகின் முதல் 15 மது உற்பத்தி நாடுகளின் பட்டியல்.

Country20102011201220132014
 பிரான்சு44,38150,75741,54842,00446,698
 இத்தாலி48,52542,77245,61652,02944,739
 எசுப்பானியா35,35333,39731,12345,65041,620
 ஐக்கிய அமெரிக்கா20,88719,14021,65023,59022,300
 அர்கெந்தீனா16,25015,47311,77814,98415,197
 ஆத்திரேலியா11,42011,18012,26012,50012,000
 தென்னாப்பிரிக்கா9,3279,72510,56910,98211,316
 சீனா13,00013,20013,51111,78011,178
 சிலி8,84410,46412,55412,82010,500
 செருமனி6,9069,1329,0128,4099,334
 போர்த்துகல்7,1485,6226,3086,2376,195
 உருசியா6,4006,3536,4006,2006,000
 உருமேனியா3,2874,0583,3115,1134,093
 நியூசிலாந்து1,9002,3501,9402,4843,204
 கிரேக்க நாடு2,9502,7503,1153,3432,900
Rest of the World27,84730,90627,19431,17731,526
World264,425267,279257,889291,902278,800

Comments

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...